Wednesday, June 15, 2011

என் நண்பர்களை போல்

என் நண்பர்களை போல் தலைச்சிறந்த 
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே  உயிரில்ல ஜடப்பொருளுக்கும் 
உயிர் கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது.....!!!!!

என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த 
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும் 
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது......!!!!!

Thursday, April 7, 2011

உடைந்து போன இதயத்தின் வலி

வலி தாங்கி வலி தாங்கி உயிர் வாழ காரணமான இதயமே சுமையாகி போனது ...!!!நட்பில் விழுந்த விரிசளினால் இதயமே இன்று சுமையாகி போனது...!!!...உண்மையாய் உன்னை நேசிததுதான் குற்றமா ...??? அதனால் தான் எனக்கு இதனை பெரிய தண்டனையா ...???உனக்கும் எனக்குமான நட்பென்னும் இந்த இலாபம் இல்லா ஒப்பந்தம் இன்றுடன் முடிந்து போனது ஏனோ ...???கண்ணாடி மனதில் கல் எறிந்தால் உடைந்துவிடும் என்று நீ அறியாமல் போனது ஏனோ ...??? சுயநலம் இல்லா நட்பில் உன்னால் மட்டும் எப்படி சுயநலமாக இருக்க முடிந்தது ...??? உன்சுயநலம் அறியாமல் நேசித்த நான் தானே இன்று கண்ணீர் சிந்துகிறேன் . நடந்தவை எல்லாம் கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் துடிக்கிறது ....உன் அன்பு பொய் என்று அறிவுக்கு புரிகிறது அனால் ஏனோ தெரியவில்லை இன்னும் என் மனதுக்கு மட்டும் புரியவில்லை .... பொய் என்று தெரிந்தும் அதற்காக தான் மனம் ஏங்குகிறது ..... இது தான் மனதின் இயல்போ ...???

Saturday, January 22, 2011

ஜனனம் வேண்டும்

நான் எத்தனை முறை மரணத்தை தழுவினாலும்
அத்தனை முறையும் எனக்கு இந்த பிரபஜத்தில்
ஜனனம் வேண்டும் ,
எனது ஒவ்வொரு ஜனனத்திலும் உன் நட்பினை
பெற்று உன் அன்பிற்காக ஏங்கியே நான் மரணத்தை
தழுவவேண்டும் அன்பே,,,...!!!