Wednesday, June 15, 2011

என் நண்பர்களை போல்

என் நண்பர்களை போல் தலைச்சிறந்த 
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே  உயிரில்ல ஜடப்பொருளுக்கும் 
உயிர் கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது.....!!!!!

என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த 
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில் 
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு 
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும் 
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி 
இருக்கிறது......!!!!!

Thursday, April 7, 2011

உடைந்து போன இதயத்தின் வலி

வலி தாங்கி வலி தாங்கி உயிர் வாழ காரணமான இதயமே சுமையாகி போனது ...!!!நட்பில் விழுந்த விரிசளினால் இதயமே இன்று சுமையாகி போனது...!!!...உண்மையாய் உன்னை நேசிததுதான் குற்றமா ...??? அதனால் தான் எனக்கு இதனை பெரிய தண்டனையா ...???உனக்கும் எனக்குமான நட்பென்னும் இந்த இலாபம் இல்லா ஒப்பந்தம் இன்றுடன் முடிந்து போனது ஏனோ ...???கண்ணாடி மனதில் கல் எறிந்தால் உடைந்துவிடும் என்று நீ அறியாமல் போனது ஏனோ ...??? சுயநலம் இல்லா நட்பில் உன்னால் மட்டும் எப்படி சுயநலமாக இருக்க முடிந்தது ...??? உன்சுயநலம் அறியாமல் நேசித்த நான் தானே இன்று கண்ணீர் சிந்துகிறேன் . நடந்தவை எல்லாம் கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் துடிக்கிறது ....உன் அன்பு பொய் என்று அறிவுக்கு புரிகிறது அனால் ஏனோ தெரியவில்லை இன்னும் என் மனதுக்கு மட்டும் புரியவில்லை .... பொய் என்று தெரிந்தும் அதற்காக தான் மனம் ஏங்குகிறது ..... இது தான் மனதின் இயல்போ ...???

Saturday, January 22, 2011

ஜனனம் வேண்டும்

நான் எத்தனை முறை மரணத்தை தழுவினாலும்
அத்தனை முறையும் எனக்கு இந்த பிரபஜத்தில்
ஜனனம் வேண்டும் ,
எனது ஒவ்வொரு ஜனனத்திலும் உன் நட்பினை
பெற்று உன் அன்பிற்காக ஏங்கியே நான் மரணத்தை
தழுவவேண்டும் அன்பே,,,...!!!

Thursday, December 30, 2010

என்னவள்


தங்கமே பெருமை கொள்ளும் என்னவள்
ஆபரணம் அணிந்ததால்  ....
பட்டுபூச்சி தன்னை மாய்த்து கொள்ளும்
என்னவள் புடவை உடுத்தினால் ....
ரோஜாவும் ஏக்கம் கொள்ளும் என்னவளின்
கூந்தலில் தவழ்திட....
சூரியனும் தன்னை மறைத்து கொள்ளும்
என்னவள் வாடாமல் இருக்க...
நிலவும் தன்னை தாழ்த்தி கொள்ளும்
என்னவளின் அழகை கண்டு.....
இலக்கணமும் தடுமாறும் என்னவளை
வர்ணனை செய்திட...
வீரமும் கற்று கொள்ளும் என்னவளின்
பேராற்றல் கண்டு......
பிரபஜமே போற்றும் என்னவளின்
குணம் அறிந்தால்....
பெண்மைக்கு ஒரு புதிய இலக்கணம்
என்னவள் .....
நேர்மையும் தைரியம்மும் என்னவளின்
தனி சிறப்பு .....
 இதற்குமேல்  என்னவளை பற்றி எழுதிட
எனக்கு ஆற்றல் இல்லை .....


Saturday, October 23, 2010

நினைவுகள்

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...



நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது......!!  

உன் பெயர் எழுத படவில்லை செதுக்க பட்டு இருக்கிறது தோழி .....!!!!!!

ஒவ்வொரு அரிசியிலும் அதற்குடைவர் பெயர் எழுதி இருக்குமாம்,

அதை பற்றி நான் அறியேன் ஆனால் மற்றொன்றை நான் அறிவேன்

என் வாழ்கை என்னும் புத்தகத்தில் நட்பு என்னும் பக்கத்தில் உன்

பெயர் எழுத படவில்லை செதுக்க பட்டு இருக்கிறது தோழி .....!!!!!!