Thursday, December 30, 2010

என்னவள்


தங்கமே பெருமை கொள்ளும் என்னவள்
ஆபரணம் அணிந்ததால்  ....
பட்டுபூச்சி தன்னை மாய்த்து கொள்ளும்
என்னவள் புடவை உடுத்தினால் ....
ரோஜாவும் ஏக்கம் கொள்ளும் என்னவளின்
கூந்தலில் தவழ்திட....
சூரியனும் தன்னை மறைத்து கொள்ளும்
என்னவள் வாடாமல் இருக்க...
நிலவும் தன்னை தாழ்த்தி கொள்ளும்
என்னவளின் அழகை கண்டு.....
இலக்கணமும் தடுமாறும் என்னவளை
வர்ணனை செய்திட...
வீரமும் கற்று கொள்ளும் என்னவளின்
பேராற்றல் கண்டு......
பிரபஜமே போற்றும் என்னவளின்
குணம் அறிந்தால்....
பெண்மைக்கு ஒரு புதிய இலக்கணம்
என்னவள் .....
நேர்மையும் தைரியம்மும் என்னவளின்
தனி சிறப்பு .....
 இதற்குமேல்  என்னவளை பற்றி எழுதிட
எனக்கு ஆற்றல் இல்லை .....


Saturday, October 23, 2010

நினைவுகள்

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...



நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது......!!  

உன் பெயர் எழுத படவில்லை செதுக்க பட்டு இருக்கிறது தோழி .....!!!!!!

ஒவ்வொரு அரிசியிலும் அதற்குடைவர் பெயர் எழுதி இருக்குமாம்,

அதை பற்றி நான் அறியேன் ஆனால் மற்றொன்றை நான் அறிவேன்

என் வாழ்கை என்னும் புத்தகத்தில் நட்பு என்னும் பக்கத்தில் உன்

பெயர் எழுத படவில்லை செதுக்க பட்டு இருக்கிறது தோழி .....!!!!!!

Thursday, October 21, 2010

தனிமை

நீ அருகில் இருந்தபோது

எனக்கு உன்னுடன் பேசுவதற்கு

நேரமில்லை .........!

நீ விலகி சென்றுவிட்டாய்

இப்போது என்னுடன் பேசுவதற்கு

யாரும்இல்லை .........!

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

நான் விரும்பிய ஒரு இதயம் என்னை விரும்பாத போதுதான்,
என்னை விரும்பிய இதயத்தின் வலி புரிந்தது.....

என்னை விரும்பிய இதயத்தை நான் புரிந்த போதுதான் என்னை விரும்பிய இதயத்தை நான் தொலைத்தது புரிந்தது ..............

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

பிரிந்த பின் புரிந்த பிரியம் இதயத்தில் வலியை மட்டும்தான் தந்தது ......

...friend in need is friend indeed

அவசரத்திற்கு உதவுபவனே உண்மையான நண்பன்...




...friend in need is friend indeed
இதுவன்றோ சிறந்த நட்பு..
This is the evergreen Friendship

நண்பேன்டா.......--

Wednesday, October 20, 2010

லாபம் இல்லாத ஒப்பந்தம்......

நட்பெனும் உலகிலே உனக்கும் எனக்குமான எழுதபடாத ஒரு லாபம் இல்லாத ஒப்பந்தம்......
லாபமில்லா இந்த ஒப்பந்ததில் இருக்கும் நிர்பந்தகள் ஏராளம் ..................

ஒப்பந்தத்தின் சில முக்கிய நிர்பந்தகள் .......

......நான் வீழ்கிற போதெல்லாம்என்னை எழுச்சி செய்ய நீ வரவேண்டும்......நான் வெல்கிற போதெல்லாம்என் வெற்றிகளுக்கு நீ காரணமாய் இருக்க வேண்டும்....நான் கண்ணீர் சிந்தும் போதெல்லாம்என் கண்ணீர் துடைக்க நீ வேண்டும்........என் சோக தருனகளில் தோள்சாய்ந்திடதொள்கொடுதிட நீ வர வேண்டும்...........நான் நன்மை செய்யும் போதுஎன்னை தட்டி கொடுக்க நீ வர வேண்டும்.......நான் தவறு செய்யும் போதுஎன்னை கண்டித்திட நே வேண்டும்.......என் எல்லா இனிய மற்றும் சோக தருனகளிலும்நீ என்னுடன் இருக்க வேண்டும்.......நட்பிலே என் உயிருடன் இரண்டர கலந்திட வேண்டும் ,என் ஆயுள் வரை உன் நட்பு வேண்டும் ,நமக்கு பின்னும் நம் நட்பு வாழ்ந்திட வேண்டும்.............இப்படி உனக்கும் எனக்கும் இடையான ஒப்பந்தத்தின்நிர்பந்தகள் ஏராளம் ............உன்னுடன் அணைத்து தருனகளிலும் நான் இருந்துஎனது ஒப்பந்தத்தை நிறைவு செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன் .........நீ ஒப்பந்தத்தை நிறைவு செய்வாயா ????????????????

தேடல்

பொய் இல்லாத நட்பு,
சுயநலம் இல்லாத உறவுகள்,
கள்ளம் இல்லாத காதல்,
உண்மையான அன்பு,
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது .
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது....
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ........

வரவேற்கிறேன்

நண்பர்கள் அனைவரையும் எனது வலைபூவிற்கு வரவேற்கிறேன்

என்றும் அன்புடன்
கோரா.விஜி